Translate

Sunday, January 12, 2014

Live Long With Diabetes. -(12)அகஸ்தியர் உள்ள போது கவலை எதற்கு?





அன்பர்களே!
மலேஷியாவில் உள்ள நண்பர்களில் பல பேர் இனிப்பு நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் பல பேர்கள் 20 வருடங்களாக கூட ஆங்கில மருந்துகளைச் சாப்பிடுபவர்களாக உள்ளார்கள். என்னதான் மருந்துகளை வேளைத்
தவராமல் சாப்பிட்டாலும் அவர்கள் நல்ல பழக்க வழக்கங்களையும் நல்ல ஆகார விதி முறைகளையும் கடைப்பிடிக்காவிட்டால் மருந்தே வேலை செய்யாமல் உடல் நலிய ஆரம்பிக்கும்.நிறைய காய்கறி ,தானிய வகைகள் கலந்தமேல் நாட்டு ஆகாரம்’ அகஸ்தியர் டயாப் மால்ட்’ எனும் கலவை.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மாபெரும் பொக்கிஷம்.நரம்புத்தளர்ச்சியை நீக்கி நல்ல பலத்தைத்தரவல்லது.
எங்கிருந்தும் ஆர்டர் செய்து இதனைப்பெறலாம்.

நல்ல பழக்க வழக்கம் என்பது சரியான நேரத்தில் அளவோடு சாப்பிடுவது; நிறைவான நிம்மதியான  தூக்கத்தை மேற்கொள்ளுவது.
இனிப்பு நோயாளிகளுக்கு இன்பமான தூக்கம் வரவே வராது.இங்கும் அங்கும் புரண்டு புரண்டு படுப்பர்.இவர்களுக்கு மூளைக்கு சாந்தித் தரக்கூடிய மருந்துகளை தயாரித்துத்தரவேண்டும்.தினமும் நல்ல தைலங்களால் தலையை நீவிவிட்டுத்தூங்கினால் நல்ல தூக்கம் வரும்.

இயற்கையான பழங்களுடன் அன்றாட ஆகாரங்களிலும் தனி அக்கரை எடுத்து
அளவோடு சாப்பிட்டு நலமாக இருங்கள்.சரி சீர்  உணவு என்றமுறையைப் பின் பற்றி மாவு சத்தைக் குறைத்து, பிறசத்துக்களைச் சாப்பிட்டு  வாருங்கள்.
நல்ல உழைப்பு என்பது தினம் தினம் தேவை!உழைப்பு இல்லையென்றால் அவசியம் தேகப்பயிற்சி செய்து விட்டுத்தான் தூங்க வேண்டும் எனும் கொள்கையைக்கடைப்பிடியுங்கள்.(12)

இரவு சாப்பிட்டவுடன் தூங்கும் பழக்கத்தை மாற்றி அமையுங்கள்.அதாவது கூடிப்போனால் இரவு 9.00 க்குள் சாப்பிட முயற்சியுங்கள்.
கண் பார்வை மங்க ஆரம்பித்தால் அதற்குறிய சத்து மருந்துகளை சித்த மருத்துவரிடம் கேளுங்கள். கண் நரம்புகளை  ஆதங்கமாக உருவி விடுங்கள்.
for more info; healthtradi@gmail.com